மத வன்முறைத் தடுப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சி எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்பு இருந்த மசோதாவில் மத வன்முறைக்கான பொறுப்பு, அந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாய மக்கள் மீது சுமத்தப்படும் என்ற அம்சம் நீக்கப்பட்டு அனைத்து சமுதாயத்திற்கும் நடுநிலையாக இருக்கும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் போக்காக மத்திய அரசு மத வன்முறையை கட்டுப்படுத்த களம் இறங்கலாம் என்பதை மாற்றி வன்முறை நடக்கும்போது அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு உதவி கோரினால் மட்டுமே மத்திய அரசு அதில் தலையிடும் என்றும், அந்த மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத வன்முறை தடுப்பு சட்டத்தை ஆதரிக்கிறீர்களா? இதனால் பெரும்பாண்மை மதத்தினர்கள் பாதிக்கப்படுவார்களா?
உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் எழுதுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.