BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 22 December 2013

கல்லூரி மாணவியை மிரட்டி ஆண் நண்பருடன் உறவுகொள்ள வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது



கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள‌ மருத்துவக் கல்லூரி ஒன்றில் படிக்கும் 22 வயது மாணவி அவரது ஆண் நண்பருடன் கடந்த வியாழக்கிழமை இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.


கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் காரை வழி மறித்து அவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத "கெஸ்ட் ஹவுஸ்" ஒன்றுக்கு அழைத்துச் சென்றது. அங்கே அந்த மாணவியை அவரது ஆண் நண்பருடன் செக்ஸ் வைத்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளது. இதை அவர்கள் மறுக்க அந்த கும்பல் 2 பேரையும் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி பணிய வைத்துள்ளது, இருவரும் செக்ஸ் உறவு கொள்வதை வீடியோவாக எடுத்த இந்த கும்பல் இவர்களிடம் ரூபாய் 25 இலட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் தரவில்லையென்றால் இதை சோஷியல் நெட்வொர்க்கில் வெளியிடுவோம் என்றும் மேலும் கல்லூரி முதல்வர் மற்றும் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு வீடியோவை அனுப்புவோம் என்றும் மிரட்டியதில் அந்த 2 பேரும் ரூ.3 லட்சம் தர சம்மதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் குற்றவாளிகளில் ஒருவனின் இடத்திற்கு சென்று ரெய்டு செய்து வீட்யோவை கைப்பற்றினர், இதில் 3 பேர் ஏற்கனவே குற்றங்கள் புரிந்தற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு பெண்கள் பாதுகாப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு செல்வது சரிதானா? உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

# என்னாங்கடா இது புதுசு புதுசா ப்ளான் பண்றானுங்க.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media