BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 December 2013

விடுதலை தள்ளிப்போனது திமுக அரசால் தான் - ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியின் வருத்தம்

என்னுடைய விடுதலை தள்ளிப்போனது திமுக அரசால் தான் - ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியின் வருத்தம்.


ராஜீவ் கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையி உள்ள நளினி ஜூனியர் விகடனுக்கு இதழுக்கு பேட்டி அளித்துள்ளார், அவர் விடுதலை பற்றிய ஒரு கேள்விக்கு அளித்த பதில்

கேள்வி: உங்கள் விடுதலை தள்ளிப்போனது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

பதில்: இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களில் விடுதலையாவதற்கான வாய்ப்பு எனக்கு மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. அதற்காக முன் விடுதலைக் குழு அமைக்கப்பட்டு பல கட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு என் விடுதலையை ஒப்புக்கொண்டனர். ஆனால், அப்போது இருந்த தி.மு.க. அரசாங்கம், ராயப்பேட்டை இன்ஸ்பெக்டரிடம் ஒரு அறிக்கை வாங்கி, நளினி வெளியே வந்தால் ராயப்பேட்டையில்தான் தங்குவார். அது வி.வி.ஐ.பி. மற்றும் வி.ஐ.பி-க்கள் நிறைந்த பகுதி. அதனால், அவர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்று அறிக்கை கொடுத்தது. அதன் பேரில் என்னுடைய விடுதலை தடைபட்டுள்ளது. இது அரசியல் வழக்கு என்பதால்தான், இதில் தலையிட யாரும் விரும்பவில்லை.

சிறையில் பிறந்த எனது குழந்தைக்கு மூன்று வயதாக இருக்கும்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாதான் அப்போதும் முதல்வராக இருந்தார். அவர் மனிதாபிமானத்துடன் நடவடிக்கை எடுத்து என்னுடைய குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார். அதுபோல், என்னுடைய விடுதலை விவகாரத்திலும் அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

# அவரை கேட்டால் ஈழத்தமிழர்களால் தான் என் ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது என்பார்

# நளினி சொல்வதுபோல் அவர் விடுதலை தள்ளி போக திமுக அரசு காரணம் என்று நம்பினால் "லைக்" போடுங்கள், இல்லை என்றால் கமெண்ட்டில் ஏன் என்று சொல்லுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media