BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 16 January 2014

ஹான்காங்கில் துன்புறுத்தப்படும் வெளிநாட்டு பணியாட்கள்



இன்டோனெஷ்யாவில் இருந்து, ஹான்காங்கிற்கு பணியாளாக வந்த எர்வியானா என்கிற‌ 23 வயது பெண், தொடர்ந்து எட்டு மாதங்களாக, தன் முதலாளியால் அடிக்கப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இப்போது தன் உருவமே மாறி காட்சி அளிக்கிறார். அவரால் நடக்க கூட இயலாமல், தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்டோனெஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து, ஹான்காங்கிற்கு பணியாளாக ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள், தங்கள் முதலாளிகளால், மிகுந்த பாதிப்புக்குள்ளாகி அடிமைகள் போல் நடத்தப்பட்டு வருகின்றனர்.  கிட்டதட்ட மூன்று லட்சம் பணியாட்கள், வெளிநாட்டில் இருந்து வந்து, ஹான்காங்கில் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இதில் 18 சதவிகிதம் பேர், உடல் ரீதியாக துன்புறுத்த படுகின்றனர் என்று 2012ல் எடுக்கபட்ட‌ ஒரு சர்வே வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ஐ.நா. சபையில் உள்ள குழுக்கள், வெளி நாட்டில் இருந்து வரும் பணியாட்களை பாதுகாக்க முயற்சிகள் எடுக்குமாறு, ஹான்காங் அரசை வலியுறுத்தி வருகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media