டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவாலுக்கு எதிராக இம்மாதம் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கூறியிருக்கிறார். இவர், கேஜ்ரிவால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அவர் ஒரு பொய்யர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்றது கொள்கைக்கு எதிரானது. காங்கிரஸ் சொல்வதை கேட்டுதான் கெஜ்ரிவால் ஆட்சி நடத்துகிறார். டென்மார்க்கை சேர்ந்த பெண், டெல்லியில் கற்பழிக்கப்பட்டதை குறித்து கேஜ்ரிவால் வாயே திறக்கவில்லை. குடிநீர், மின்சாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வேறு, நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்கள் வேறு என்று கேஜ்ரிவால் மீது புகார்களை அடுக்குகிறார் வினோத்குமார் பின்னி.
கேஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்றும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆம் ஆத்மி கட்சியை கண்டித்து, வருகிற 27ம் தேதி மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று அக்கட்சி மீது கடும் அதிருப்தியுடன் பேசியிருக்கிறார், எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி.
ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்றது கொள்கைக்கு எதிரானது. காங்கிரஸ் சொல்வதை கேட்டுதான் கெஜ்ரிவால் ஆட்சி நடத்துகிறார். டென்மார்க்கை சேர்ந்த பெண், டெல்லியில் கற்பழிக்கப்பட்டதை குறித்து கேஜ்ரிவால் வாயே திறக்கவில்லை. குடிநீர், மின்சாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வேறு, நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்கள் வேறு என்று கேஜ்ரிவால் மீது புகார்களை அடுக்குகிறார் வினோத்குமார் பின்னி.
கேஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்றும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆம் ஆத்மி கட்சியை கண்டித்து, வருகிற 27ம் தேதி மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று அக்கட்சி மீது கடும் அதிருப்தியுடன் பேசியிருக்கிறார், எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.