BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 19 February 2014

குழந்தைக்கு காது குத்தும் போது அது அடையும் வேதனையைப் போன்றது என் வேதனை- அழகிரி


மதுரையில் சமீபத்தில் திருமண விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மு.க.அழகிரி, "தி.மு.க. தொண்டர்கள் கட்சியை நேசிப்பதுபோல் என்னையும் நேசிக்கின்றனர். யாரோ போஸ்டர் ஒட்டினார்கள் என்பதற்காக கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கியது வருத்தம் அளிக்கும் செயலாகும்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை நீக்குவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. இப்படி கட்சி நிர்வாகிகளை நீக்கி விட்டு நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பார்கள்? என கேட்டிருந்தார்.

திருமண விழாவைத் தொடர்ந்து வில்லாபுரத்தில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்ட அழகிரி, அங்கு பேசியபோது, "குழந்தைக்கு காது குத்துவது எப்படி வேதனையை தருமோ, அதே போல் கட்சியில் இருந்து நீக்கியது நெஞ்சில் வேதனையை ஏற்படுத்தியது. ஒரு ஒன்றியத்தில் குறைகளை கூறி நியாயம் கேட்டேன். உடனடியாக நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இது தலைவருக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லையா?" என்பது எனக்கு தெரியவில்லை என்று தன் வேதனையை தெரிவித்து இருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media