BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 18 February 2014

டெசோ கூட்டம், பிரதமருக்கு கடிதம், எங்கள் மாநாட்டு தீர்மாணத்தின் வெற்றியே மூவர் தூக்கு தண்டனை ரத்து - கருணாநிதி



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களில் கருணை மனுவை தமிழக அரசு பரிசீலித்த நிலையில் நளினிக்கு மட்டும் தண்டனை
குறைப்பு செய்து மற்ற மனுக்களை நிராகரிக்கலாம் என்று 2000-ம் ஆண்டில் திமுக அரசுதான் முடிவு எடுத்தது இந்நிலையில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி அந்த தூக்கு தண்டனை ரத்துக்கே தாங்கள் தான் காரணம் என்பது போல அறிக்கையில் கூறியுள்ளார்

சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து... குறித்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது

"டெசோ" கூட்டங்களின் வாயிலாகவும் - பிரதமருக்கு எழுதிய பல்வேறுகடிதங்களின் வாயிலாகவும் - விடுத்த ஏராளமான அறிக்கைகளின் மூலமாகவும் - இறுதியாக திருச்சியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பத்தாவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒரு வெற்றியாக - உச்ச நீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் சாந்தன்,பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு வாழும் உரிமை கிடைத்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நேற்றல்ல! கடந்த பல ஆண்டுக் காலமாகவே நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூக்குத் தண்டனையே ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். என் தலைமையிலே கழக ஆட்சி இருந்த போது நான் எடுத்த முயற்சியாலும், நான் கொடுத்த வேண்டுகோள்களின் அடிப்படையிலும் துhக்குத் தண்டனையிலிருந்து விடுபட்ட தியாகு, கலியபெருமாள், நளினி ஆகியோரைப் போல இன்றைக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுபட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சிறப்பான தீர்ப்பினைத் தொடர்ந்து, உச்ச நீதி மன்றத்தின் பரிந்துரையை ஏற்று, இவர்கள் ஏற்கனவே இதுவரை அனுபவித்த தண்டனைக் காலத்தினை மனதிலே கொண்டு, உடனடியாக அவர்களை மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அவ்வாறு அவர்கள் விடுதலை அடைவார்களேயானால் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media