BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 18 February 2014

பணத்திற்காக நடிக்கும் கமலுக்கு எதற்கு பத்ம பூஷன்? கமல் ரசிகர்களைக் கடுப்பேற்றும் தங்கர் பச்சான்


நடிகர் கமல் ஹாசனுக்கு சமீபத்தில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. காசு வாங்கி கொண்டும் நடிக்கும் கமலுக்கு எதற்கு அந்த விருது என பரபரப்பான பேச்சை ஆரம்பித்து இருக்கிறார், இயக்குநர் தங்கர்பச்சான்.

இதைப் பற்றி அவர் பேசுகையில், "கமல் திறமையான நடிகர்தான். அவருக்கு கொடுக்கட்டும். வேணாங்கல. ஆனால் அவர் ஒண்ணும் சேவை செய்யலையே. காசு வாங்கிட்டுதானே நடிக்கிறார். அவருக்கு இருக்கிற வசதிக்கு உலகம் முழுக்க கூட சுத்தலாம். ஆனால் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அப்படியொரு விருதை கொடுக்கலாமே? 92 வயசிலேயும் மக்களுக்காக மொழிக்காக எழுதிகிட்டு இருக்கிற அவருக்கு கலைமாமணி விருது கூட கொடுக்கலையே? இவரைப்போல இங்கு எல்லா துறைகளிலும் ஏராளமானவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் பத்ம விருதுகள் கொடுக்கப்படணும். ஆனால் இப்போதெல்லாம் இந்த விருதுகள் கொடுக்கப்படறதை விட வாங்கப்படுதுன்னுதான் சொல்லணும்..." என்று தங்கர் பச்சான் கூறியிருக்கிறார்.

தங்கர் பச்சானின் பேச்சு, கமல் ரசிகர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் கூறுவதில் என்ன தவறு என்றும் சிலர் கேட்கின்றனர்.

தங்கர்பச்சானின் கருத்தில், உங்களுக்கு உடன்பாடு இருந்தால், லைக் போடுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media