BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 18 February 2014

பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கிய பெண், கோர்ட் உத்தரவுப்படி கல்லால் அடித்துக் கொலை


இன்றைய சூழலில், பேஸ்புக் பலரின் வாழ்வோடு இணைந்த ஒன்றாக இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கில் கணக்கு வைத்து கொண்டிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், சிரியா நாட்டை சேர்ந்த பெண், பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியதற்காக, அவரை கல்லால் அடித்து கொல்லும் படி, நீதிமன்றம் உத்தரவு இட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த அல் ஜஸ்ஸிம் என்றப் பெண் மீது ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகள் பேஸ்புக் தளத்தில் அக்கவுண்ட் தொடங்கினார் எனக் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து, அப்பெண் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பேஸ்புக் அக்கவுண்ட் முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தார். அதனைத் தொடர்ந்து அப்பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media