வேப்பேரி போலீஸ் நிலையம் அருகில் மற்றும் புரசைவாக்கம், பட்டாளம் ஆகிய 3 இடங்களில் இருந்த ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலைகளை நேற்று இரவு மர்ம ஆசாமிகள் உடைத்துள்ளனர். உடைக்கப்பட்ட 3 இடங்களிலும் ராஜீவ் காந்தியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று வட சென்னை மாவட்ட காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ பேசிய போது, "ராஜீவ் சிலைகள் உடைக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். சிலைகளை உடைத்துவிட்டதால் உணர்வுகளை அழித்துவிட முடியாது. தற்போது உடைக்கப்பட்டது சிமெண்டு சிலைகள். இனி அதே இடத்தில் வட சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவின் வெண்கல உருவசிலை அமைக்கப்படும்." என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.