BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 27 February 2014

நாகர்கோவிலில் இரண்டாம் வகுப்பு மாணவி கற்பழிப்பு


நாகர்கோவிலை சேர்ந்த சிறுமி ஒருவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 22–ந் தேதி பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த லாலு(வயது 20) என்பவர் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தகாத முறையில் நடந்தார். இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் இருந்து தப்பிக்க போராடிய போது, வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தெரிய வந்ததும், சிறுமியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட லாலு மீது 2012–ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி லாலுவை தேடி வருகின்றனர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media