BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 27 February 2014

சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் 100 பேர் கைது


சத்தியமூர்த்தி பவனில் கல் வீசி தாக்குதல், ராஜீவ் சிலை உடைப்பு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, வளசர வாக்கம் சின்ன போரூர் பகுதியில் உள்ள 'நாம் தமிழர்' கட்சி தலைவர் சீமான் வீட்டை முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள், அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ராஜீவ் சிலை உடைப்பை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சியினர், வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக கிடைக்கப் தகவலின் அடிப்படையில், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media