BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 March 2014

நாங்களாவது ஏ.டி.எம் களை திறந்தோம், ஜெ. மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறார்- கார்த்திக் சிதம்பரம்.


 மதுரை டென்னிஸ் சங்கம், டி.வி.எஸ் நிறுவனம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து மார்ச் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை டென்னிஸ் போட்டி மதுரையில் நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழாவில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுயது:

"சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழக்கும் என முதல்வர் கூறினார். ஆனால், டெபாசிட் இழப்பது யார் என்பதை மக்களே தீர்மானிப்பர். அவர் கூறிய வார்த்தைகளை நான் அர்ச்சனையாக ஏற்றுக் கொள்கிறேன். 'ஆல் இன் ஆல் அம்மா.. சொல்வதெல்லாம் சும்மா…' நாங்கள் மக்களின் தேவைக்காக ஏ.டி.எம் மையங்களை அமைத்தோம். ஆனால், அவரோ டாஸ்மாக் மதுக் கடைகளை மட்டுமே அமைத்திருக்கிறார்"

இவ்வாறு கார்த்திக் சிதம்பரம் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media