பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் பொதுச் செயலர் வைகோ இன்று மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, மதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு, அழகிரியை சந்தித்து வைகோ கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
"நானும், அழகிரியும் விமான நிலையத்தில் சந்தித்தோம். இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டோம். அப்போது, என்னை வீட்டிற்கு வரும்படி அழகிரி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இன்று அவரை சந்தித்தேன்.
இந்த சந்திப்பின்போது, வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டேன்.
குறிப்பாக, விருதுநகரில் போட்டியிடும் எனக்கும், மற்ற மதிமுக வேட்பாளர்களுக்கும் ஆதரவு கோரினேன்.
நாங்கள் மனம்விட்டு பேசிக்கொண்டோம். அப்போது, எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று அழகிரி கூறினார்."
மதிமுகவுக்கு அழகிரி ஆதரவு தெரிவித்தாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறியதற்கு அதுதானே அர்த்தம்? என கூறினார் வைகோ.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.