BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 23 March 2014

அரசியலை கைவிட்டு, காந்தியின் பாதையில் மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன்



புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நேற்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இது வரையில் 8 தேர்தல்களில் போட்டியிட்டுள்ள நான், 17 ஆண்டுகள் மத்திய மந்திரியாக பணியாற்றியுள்ளேன். நான் மந்திரியாக பதவி வகித்த துறைகள் ஜவுளித்துறையை போன்று சாதாரணமானது அல்ல. அப்படி இருந்திருந்தால் மனஅமைதியுடன் பணியாற்றி இருப்பேன்.

ஆனால், மத்திய உள்துறை மற்றும் நிதித் துறை மந்திரி என்ற வகையில் அன்றாடம் 18 மணிநேரம் உழைக்க வேண்டியுள்ளது. எனக்கு தற்போது 68 வயது ஆகின்றது. இந்த வயதில் இன்னும் எவ்வளவு தூரம் என்னால் பயணம் செய்ய முடியும்? பிறந்தவர்கள் எல்லாம் பூமிக்கு திரும்பியே தீர வேண்டும்.

மறுபிறவி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இனி தேர்தல் அரசியலை கைவிட்டு, காந்தியின் பாதையில் மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media