BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 April 2014

ஜப்பான் வங்கியிடமிருந்து ரிலையன்ஸ் ரூ.3,500 கோடி கடன்


முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ஜப்பான் வங்கியிடமிருந்து 55 கோடி டாலர் (சுமார் ரூ. 3,500 கோடி) நிதியை கடனாக திரட்டியுள்ளது. இந்த நிதியை பெட்ரோ கெமிக்கல் ஆலையை விரிவுபடுத்தவும், புதிய எரிவாயு பிரிவைத் தொடங்கவும் அந்நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளது . இந்த கடன் வசதி 12 ஆண்டுகளுக்கானது.

வெளிநாடுகளிலிருந்து நிதியைக் கடனாகப் பெறும் முயற்சியை ரிலையன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டிலிருந்து தொடங்கி தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது. இதற்காக ஏற்றுமதிக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்துடன்  ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  ஜப்பானிய வங்கிகளின் கூட்டமைப்பான ஜேபிஐசி-யிடமிருந்து நிதி கடனாக பெறப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media