BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 25 April 2014

மோடி நடத்திய ஊர்வலம் குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்


வாரணாசியில் வேட்புமனு தாக்கல் என்ற பெயரில் பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நடத்திய ஊர் வலம் தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் உத்தரப் பிரதேச மாநில அரசு புகார் தெரிவித்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியும் புகார் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான ஆனந்த் சர்மா, செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் நேற்று வாக்குப் பதிவு நடைபெறும் போது, வாக்காளர் களைக் கவரும் வகையில், வாக்குப்பதிவு செய்யும் நேரத்தில் வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துள்ளார். இந்நிகழ்ச்சி அனைத்து தொலைக் காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டது. வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்க ளில் பிரச்சாரம் முடிவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளிலும் தொலைக்காட்சியில் மோடி தொடர்பான செய்தி வெளியிடப் பட்டுள்ளது. விதிமுறைகளை மீறிய நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கம்போல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு அமைதியாக இருந்து விடாமல், நரேந்திர மோடி உள்பட ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆனந்த் சர்மா கூறியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media