உலகின் அதிக செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலை டைம் மேகசின் வெளியிட்டுள்ளது. இதில், நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால், கோவையைச் சேர்ந்த முருகானந்தம், எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகிய நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் பற்றிய அறிமுகத்தையும் ‘டைம்’ கொடுத்துள்ளது.
அதில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைத் தலைமை தாங்குவதற்காக முன்னிறுத்தப்பட்டுள்ள பிளவை ஏற்படுத்தும் அரசியல் வாதி’ என மோடி பற்றிக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ‘துரிதமான நடவடிக்கை, தனியார்துறையை ஊக்குவித்தல், நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்காக மோடி புகழ் பெற்றவர் என்றும் கூறியுள்ளது. ஏதேச்சதிகாரத்துக்கும், இந்து தேசியவாதத்துக்கும் புகழ் பெற்றவர் மோடி என்றாலும், இந்தக் கவலைகள் மாற்றத்தை எதிர்பார்க்கும் தேசத்தின் முன் ஒரு பொருட்டாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
நவீன இந்திய அரசியல்வாதிகளில் எதிர்ப்பு அரசியலாளரான கேஜ்ரிவால், இந்திய அரசியலில் சக்திமிக்க மாற்றுநபர்’ எனக் குறிப்பிட்டுள்ளது டைம். ‘49 நாள்களில் அவரின் ஆட்சிய திகாரம் முடிவுக்கு வந்தாலும், அவருக்கு எதிரான பிரச்சாரங்களைப் பின்னுக்குத் தள்ளி தன்னை நிரூபித்திருக்கிறார். பைபிள் கதைகளில் வரும் கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெற்ற தாவீதைப் போல, பெரும் கட்சிகளை எதிர்த்து இந்திய அரசியலில் சிறப்பிடம் பிடித்திருக் கிறார்’ என்றும் டைம் கேஜ்ரிவாலை வர்ணித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.