மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோடி இது தொடர்பாகக் கூறியதாவது:
பாஜக ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து, பழங்குடியினரின் உரிமையைப் பறித்து விடும் என காங்கிரஸ் சொல்லி வருகிறது.
இதுபோன்ற பொய்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பழங்குடியினருக்கான உரிமைகளை காங்கிரஸோ பாஜகவோ அளிக்கவில்லை. பாபா சாகேப் அம்பேத்கர்தான் அவர்களுக்கு அளித்தார்.
இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்ராவ் காவித், இத்தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. நந்துர்பருக்கு அருகே யுள்ள குஜராத் கிராமங்கள் இப்பகுதியை விட கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளன.
1857-ம் ஆண்டு சுதந்திரப் புரட்சியின் போதிருந்து பழங்குடியினர் இத்தொகுதி யிலுள்ளனர்.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் பழங்குடியினருக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. வாஜ்பாய் அரசுதான் பழங்குடியினரை நினைவில் வைத்து, அவர்களுக்காக தனி அமைச்சகத்தை அமைத்தது. தனியாக பட்ஜெட் ஒதுக்கியது. மூன்று மாதங்களுக்கொரு முறை அது தொடர்பான அறிக்கையை அவர் பெற்றார்.
நான்கு மாநிலங்களில் உள்ள பாஜக அரசு, பழங்குடியினருக்கு நன்மை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினருக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி யுள்ளோம் என்றார்.
பாஜக ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து, பழங்குடியினரின் உரிமையைப் பறித்து விடும் என காங்கிரஸ் சொல்லி வருகிறது.
இதுபோன்ற பொய்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பழங்குடியினருக்கான உரிமைகளை காங்கிரஸோ பாஜகவோ அளிக்கவில்லை. பாபா சாகேப் அம்பேத்கர்தான் அவர்களுக்கு அளித்தார்.
இத்தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்ராவ் காவித், இத்தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. நந்துர்பருக்கு அருகே யுள்ள குஜராத் கிராமங்கள் இப்பகுதியை விட கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளன.
1857-ம் ஆண்டு சுதந்திரப் புரட்சியின் போதிருந்து பழங்குடியினர் இத்தொகுதி யிலுள்ளனர்.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் பழங்குடியினருக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. வாஜ்பாய் அரசுதான் பழங்குடியினரை நினைவில் வைத்து, அவர்களுக்காக தனி அமைச்சகத்தை அமைத்தது. தனியாக பட்ஜெட் ஒதுக்கியது. மூன்று மாதங்களுக்கொரு முறை அது தொடர்பான அறிக்கையை அவர் பெற்றார்.
நான்கு மாநிலங்களில் உள்ள பாஜக அரசு, பழங்குடியினருக்கு நன்மை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினருக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி யுள்ளோம் என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.