BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 23 April 2014

தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் என் டேடி, அந்த லேடியல்ல; பொய்யான பிரச்சாரங்களை சொல்லி மக்களை ஏமாற்றும் இவர்கள் எல்லாம் கேடி-ஸ்டாலின்

தென்சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழ்நாட்டின் இந்த லேடிதான்" என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், புதுக்கோட்டையில் நடந்த‌ இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

சென்னையில் பேசியுள்ள ஜெயலலிதா, அறிவுஜீவி போல ஒன்றை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தை விட அதிக வளர்ச்சி பெற்றது தமிழ்நாடு என்று பேசியதுடன்,"குஜராத்துக்கு ஒரு மோடி என்றால், தமிழகத்துக்கு இந்த லேடி", என்று குறிப்பிட்டுள்ளார். நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், தமிழகத்தை பொறுத்தவரையில், தமிழக வளர்ச்சிக்கு காரணம் நமது தலைவர் கலைஞர்தான் என்று சுட்டிக்காட்டுவதுடன்," தமிழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் அந்த லேடியல்ல, அதற்கு காரணம் என் டேடி, என்று தெரிவித்துக் கொள்ள விரும்பும், அதே சமயத்தில் பொய்யான பிரச்சாரங்களை சொல்லி" மக்களை ஏமாற்றும் இவர்கள் எல்லாம் கேடி", என்பதை அனைவரும் உணர்ந்து இருக்கிறார்கள், என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்."

இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media