பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால் இனிமேல், பணிப்பெண்கள் இவற்றை 'ப்ளைட் மோடில்' போடுமாறு கூறுவார்கள். அதனால், பயணிகள் தங்கள் மொபைல் போன்களையோ, லேப்டாப்களையோ சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை, ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் கேம்ஸ் விளையாடவும், மியூசிக் கேட்கவும், சேமித்து வைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும் வசதி ஏற்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் உற்சாகம் அளித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.