BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 18 April 2014

குஜராத்தில் இருந்து வரும் குழந்தை கூட தமிழகம் வந்தால், இங்குள்ள மின் நிலையை பார்த்து ஆச்சரியப்படும்: மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஈரோட்டில் நேற்று நட‌ந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது:

தமிழக மக்கள் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை நான் விரும்பவில்லை. குஜராத்தில் தற்போது மின் பற்றாக் குறை இல்லை. குஜராத்தில் இருந்து 12 வயதுள்ள ஒரு குழந்தை தமிழகத்துக்கு வந்தால், இங்குள்ள மின் நிலையை பார்த்து ஆச்சரியப்படும் நிலை உள்ளது.

தமிழகத்தின் பல கட்டமைப்புத் திட்டங்கள் தாமதமாவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் பொறுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பெண் காங்கிரஸைச் சார்ந்தவர். அவர்தான் தமிழகத்துக்கும், நாட் டுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளார். அது தமிழகத்தின் தவறோ, தமிழக மக்களின் தவறோ அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மாநிலங்களவைத் தேர்தல் மூலமாக வெற்றி பெற்றவர்.

பசுமை பாதுகாப்பு என்ற பெயரில் திட்டங்களை அவர் முடக்கிவிட் டார். பசுமை, சுற்றுச்சூழல் என்ற பெயரில், ‘ஜெயந்தி டேக்ஸ்' என்ற வரி மூலம் நாட்டை விற்றுவிட்டனர். பசுமையை காரணம் காட்டி முடங் கிய திட்டங்கள் அந்த அமைச்சரை மாற்றியவுடன் இரவுடன் இரவாக 250க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் தாமதமானதற்கு யார் பொறுப்பு ஏற்பது? இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்தனர்.

18 முதல் 28 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது. உங்களது கனவு களை நிறைவேற்ற பல வாய்ப்புகள் இன்றைய உலகில் உள்ளன. அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media