BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 April 2014

ஜெயா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, மின் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவரே சொல்வது வேடிக்கை- கனிமொழி

த‌மிழகம் முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கனிமொழி எம்.பி.,  தருமபுரியில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது,  "ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மின் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அவரே சொல்வது வேடிக்கையாகத்தான் உள்ளது. தன் தவறுகளுக்கு மற்றவர்கள் மீது பழிபோடுவது ஜெயலலிதாவின் தொடர் வாடிக்கை. இது ஒன்றும் புதிதல்ல. " என்று கூறினார்.

மேலும் அவர், மோடி தனக்கு திருமணம் ஆனதை முதல் முறையாக வெளியிட்டுருப்பதை பற்றி கேட்கப்பட்ட போது, "இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தகவலை மறைத்தது சரியா, தவறா என்பதை ஆணையம்தான் முடிவு செய்யும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். " என்று பதிலளித்தார்.

2ஜி விவகாரத்தை பற்றி கேள்வி எழுந்த போது, " நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதைப் பற்றி பேச வேண்டாம். " என தெரிவித்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media