BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 1 May 2014

'ஆசை' படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் பாணியில் கொலை, தன் குற்றத்தை டிவியில் ஒப்புக் கொண்ட பெண்


சென்னையைச் சேர்ந்த பேபி கலா என்ற பெண் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தன் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

2010ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தனது கள்ளக்காதலன் கவுரி சங்கருடன் சேர்ந்து கணவனின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி மூச்சுத் திணற வைத்து கொலை செய்ததாக பேபி கலா தெரிவித்தார். பின்னர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்த பேபி கலாவின் மாமியார், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேபி கலாவையும், கவுரிசங்கரையும் கைது செய்தனர்.

கள்ளக்காதலன் தனக்கு துரோகம் செய்ததையடுத்து பேபி கலா, 4 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது உண்மையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media