BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 29 May 2014

தமிழகத்தின் நலன்,வளர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது. மோடி அதனை பார்த்துக்கொள்வார். -இல.கணேசன்


"மத்திய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இது எந்த வகையிலும் தமிழகத்தை பாதிக்காது.", என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட‌ பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், செவ்வாய்க் கிழமை இரவு சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இதை கணக் கில் கொண்டு விகிதாச்சார அடிப் படையில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு எந்த பிரச்னையும் இருக்காது. பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அதனை பார்த் துக்கொள்வார்.

வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற் றுள்ள சுஷ்மா சுவராஜ், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக அந்த நாட்டுக்கே சென்று வந்தவர். தமிழக மீனவர்களின் நலனிலும் அவருக்கு அதிக அக்கறையுண்டு. எனவே அவரால் இலங்கையுடனான பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காணமுடியும்.

நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது மத்திய மாநில உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது. விழாக்களில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media