BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 29 May 2014

என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள்: ஸ்மிருதி இரானி


காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை எதிர்த்துப் அமேதி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ஸ்மிருதி இரானிக்கு மத்திய மனிதவளம் மற்றும் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

பட்டப்படிப்பு கூட முடிக்காத ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியது. காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான அஜய் மாக்கன், “மோடியின் அமைச்சரவையில் ஸ்மிருதி இரானிக்கு கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பட்டப்படிப்பு கூட படிக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விளக்கமளித்த ஸ்மிருதி; "எனது கட்சி, என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த பொறுப்பை அளித்துள்ளது. என் செயல்திறனை பார்த்துவிட்டு என்னை விமர்சியுங்கள். எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியில் கவனத்தைச் செலுத்த முடியாமல் என்னை திசை திருப்பும் வகையில் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன" என்றார்.

கல்வித்துறையை நிர்வகிக்க பட்டப்படிப்பு அவசியமா அல்லது செயல்திறன் இருந்தால் போதுமா என்பது குறித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media