நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், ஸ்மிருதி இரானி. மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், 'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தான் கல்வித் துறையை கவனிப்பார். அந்தத் துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்டப்படிப்புகூட படிக்காதவர்." எனக் கூறியுள்ளார்.
இதேபோல் சமூக ஆர்வலர் மது கிஷ்வார் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக உள்ளது தெரியுமா? 12 ஆம் வகுப்பை மட்டுமே முடித்த பின், ஃபேஷன் மாடலாக மாறி, அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடரில் மருமகளாக இருப்பவர் கல்வித் துறையை கவினிப்பாரா?" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள், பாஜகவினர் குறித்து குற்றம் கண்டுப்பிடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த அகந்தையால்தான் அவர்கள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். மக்களின் முடிவை காங்கிரஸ் ஏற்றுதான் ஆகவேண்டும். முதலில் அவர்கள் தங்கள் அகந்தையை விட்டுவிட்டு சுயபரிசோதனை செய்தால் நல்லது" என்று கூறினார்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி கருத்து கூறும்போது, "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கல்வித் தகுதி என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைவராக இருந்து, அரசுக்கு ஆலோசனைகளைக் கூறிவந்தவர். அவரது கல்வித் தகுதிச் சான்றிதழைப் பார்க்க வேண்டும்" என்றார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், 'மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்தான் கல்வித் துறையை கவனிப்பார். அந்தத் துறையின் அமைச்சர் ஸ்மிருதி இரானி பட்டப்படிப்புகூட படிக்காதவர்." எனக் கூறியுள்ளார்.
இதேபோல் சமூக ஆர்வலர் மது கிஷ்வார் தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடியின் அமைச்சரவை எப்படிப்பட்டதாக உள்ளது தெரியுமா? 12 ஆம் வகுப்பை மட்டுமே முடித்த பின், ஃபேஷன் மாடலாக மாறி, அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடரில் மருமகளாக இருப்பவர் கல்வித் துறையை கவினிப்பாரா?" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள், பாஜகவினர் குறித்து குற்றம் கண்டுப்பிடுப்பதை நிறுத்த வேண்டும். இந்த அகந்தையால்தான் அவர்கள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர். மக்களின் முடிவை காங்கிரஸ் ஏற்றுதான் ஆகவேண்டும். முதலில் அவர்கள் தங்கள் அகந்தையை விட்டுவிட்டு சுயபரிசோதனை செய்தால் நல்லது" என்று கூறினார்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி கருத்து கூறும்போது, "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கல்வித் தகுதி என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைவராக இருந்து, அரசுக்கு ஆலோசனைகளைக் கூறிவந்தவர். அவரது கல்வித் தகுதிச் சான்றிதழைப் பார்க்க வேண்டும்" என்றார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.