BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 28 May 2014

குழந்தைகளுக்கு மோடி பெயரை வைத்த முன்னாள் அமைச்சர் மீது பெற்றோர் போலீஸில் புகார்


மோடி பிரதமராக பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில் மைசூரில் உள்ள அரசு செலுவம்பா மகப்பேறு மருத்துவமனையில் ஓர் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன. அப்போது மருத்துவமனைக்கு வந்த கர்நாடக மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான எஸ்.ஏ. ராமதாஸ், அங்கிருந்த அனை வருக்கும் இனிப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் வேண்டு கோளுக்கிணங்க அங்கு பிறந்த ஆண் குழந்தைக்கு `நரேந்திர கிருஷ்ணா மோடி' என்றும், பெண் குழந்தைக்கு `தன்மயி மோடி' எனவும் பெயரை சூட்டினார். அந்த குழந்தைகளுக்கு காவி நிறத்தில் புதிய உடைகளையும் வழங்கினார்.

இந்நிலையில் மோடியின் பெயரைச் சூட்டிய அந்த இரு குழந்தைகளின் பெற்றோரும், உறவினர்களும் எஸ்.ஏ.ராமதாஸ் மீது போலீஸில் புகார் அளித்துள் ளனர்.

இது தொடர்பாக தன்மயி மோடி என்ற குழந்தையின் தந்தை மஞ்சுநாத் கவுடா பேசுகையில், ``குழந்தை பிறந்தபோது நான் மருந்து வாங்க வெளியே சென்றிருந்தேன். அப்போது குழந் தைக்கு பெயர் சூட்டியுள்ளார். என்னுடைய மனைவியிடமோ, உறவினர்களிடமோ கூட அனுமதி பெறவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஏற் கெனவே பெண்கள் விவகாரத்தில் சிக்கி, தற் கொலைக்கு முயற்சித்தவர் ராமதாஸ். அவர் மீது ஏகப்பட்ட அவப்பெயர்கள் இருக்கிறது. இப் படிப்பட்ட ராமதாஸுக்கு என் னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும் தகுதியில்லை.

நான் என்னுடைய தாயின் பெயரையே குழந்தைக்கு சூட்ட நினைத்தேன். இப்போது மருத்துவமனையும் அவர் சூட்டிய பெயரையே பிறப்பு சான்றிதழில் குறிப்பிட உள்ளது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளேன்'' என்றார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media