மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்து இருக்கும் படு தோல்விக்குப் பொறுப்பேற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் இருவரும் தெரிவித்தனர்.
இது குறித்து சோனியா கூறியதாவது: "மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். புதிதாக அமையவுள்ள அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்றுக் கொள்கிறேன்".
இதே போல் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து, இது மோசமான தோல்வி என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "தோல்விக்கான காரணம் குறித்து நிறைய யோசிக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.