ஸ்காட்லாந்து தலைநகர் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமென்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 215 வீரர் வீராங்கனைகள் சென்று உள்ளார்கள். இது 20 வது காமென்வெல்த் போட்டியாகும். இவர்கள் அனைவரும் அங்கு உள்ள விளையாட்டு கிராமத்தில் தங்கி உள்ளார்கள். இந்திய அணியுடன் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தாவும், அணியில் இணைக்கப்படாத அதிகாரியாக மல்யுத்த நடுவரான வீரேந்தர் மாலிக்கும் சென்றிருந்தனர். இவர்கள் இருவரும் கிளாஸ்கோ நகரில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரையும் நேற்றும் முன்தினம் ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். அவர்கள் செக்ஸ் புகாரில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை இந்தியாவின் விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா உறுதி செய்தார். இதில் சிக்கியுள்ள வீரேந்திர மாலிக்கை இந்திய மல்யுத்த கழகம் சஸ்பென்ட் செய்து உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.