காஷ்மீர் மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக 10 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களோடு உத்தரகண்ட் மக்கள் துணை நிற்பார்கள், இதே போன்று ஒரு துயரமான தருணத்தை நாங்களும் சந்தித்திருக்கிறோம். எனவே அந்த மக்களுக்கு நிவாரண நிதியாக 10 கோடி ரூபாய் உத்தரகண்ட் மாநிலத்தின் சார்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.