BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 14 September 2014

செல்போன் பயன்படுத்தியதை வார்டன் கண்டித்ததால் 2 பள்ளி மாணவிகள் தற்கொலை

2 பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் ரகசியமாக மொபைல் போனில் பேசியதை கண்ட ஹாஸ்டல் வார்டன் அதை  கண்டித்ததால் மனமுடைந்து 2 மாணவிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

அகர்த்தலாவில் உள்ள தாக்கர்ஜலா உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தான் இப்படி செய்து கொண்டது.  அந்த பள்ளியில் செல்போன் பயன்படுத்துவது தடை செய்யபப்ட்டுள்ளது, ஆனால் சிமா தெபர்மா, பினா தெபர்மா என்ற இந்த மாணவிகள் ரகசியமாக செல்போனைப் பயன்படுத்தியுள்ளனர்.  இது குறித்து அறிந்த விடுதி வார்டனும் மாணவிகளின் பொறுப்பாளரும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்த மாணவிகளின் உடலில் எந்த காயமோ கற்பழிப்பு முயற்சிக்கான அடையாளங்களோ இல்லை என்று போலிசார் கூறினாலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media