காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன, தமிழகத்தில் முக்கிய எதிர்கட்சியான திமுக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பாஜக தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது.
கடந்த நாடாளுமன்ற தேர்ந்தலில் கூட்டணி கட்சிகளுடன் கடுமையாக போராடி பெற்ற நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட முடியாதவாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர்கள் இருவரும் குழப்படி செய்தனர்.
தற்போது பாஜக சார்பாக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் பலரும் அதிமுகவுக்கு கட்சி தாவியுள்ளனர், பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி வாபஸ் பெற்றனர்.
திருநெல்வேலி மேயர் வேட்பாளர் பாஜகவின் வெள்ளையம்மாள் முதலில் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றார் மேலும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைய அவர் சென்னை விரைந்துள்ளார்.
ஆவடி பாஜக வேட்பாளர் தாரிணியும் போட்டியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்,
ஆலந்தூரில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீதி சேவியரும் அதிமுகவுக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ்பெற்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை செளந்தராஜன் அதிமுக மிரட்டல் காரணமாக நெல்லை பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றார் என்றும் பிற வேட்பாளர்களையும் அதிமுக மிரட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் அதிமுக பாஜகவை கண்டு பயப்படுகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார் தமிழிசை செளந்தராஜன்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.