திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தின் ஆட்சியை கண்டு வெதும்பியிருந்த தமிழக மக்கள் தங்கள் வாக்கு என்னும் ஆயுதத்தை மே 13, 2011
ல் பயன்படுத்த படுதோல்வி அடைந்தது திமுக, அதிமுக பெரும் வெற்றி பெற்று மே 16, 2011ல் ஆட்சியில் அமர்ந்தார் ஜெயலலிதா.
இரண்டாண்டுகால ஜெயலலிதா ஆட்சி சாதனையா? வேதனையா?
சமச்சீர்கல்வி குழப்பம், நூலகமாற்றம், தலைமை செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியது என்பதில் ஆரம்பித்து தொடக்கத்தில் தன் ஈகோவுக்காக பல அதிருப்திகளோடு ஆரம்பித்த ஜெயலலிதா அரசு மின்வெட்டை சரி செய்யாதது என மக்களின் அதிருப்தியில் சென்றிருந்தது. ஆனாலும் மக்களுக்கு திமுக மீதிருந்த அலர்ஜி கொஞ்சம் கூட மாறவே இல்லை. இந்நிலையில் ஒரு ரூபாய் இட்லி அம்மா மெஸ், அம்மா திட்டம் என்று சில செயல்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றன.
சசி குடும்பங்களின் கொட்டம் அடங்கியது.
சன் குடும்ப டிவிகள் தவிர வேறு எதுவுமே செயல்பட முடியாமல் இருந்த நிலையில் இன்று புதியதலைமுறை, விஜய் டிவி, தந்தி டிவி, சத்யம் டிவி என பல சேனல்களும் கலக்கலாக செயல்பட ஊடக கருணாநிதி குடும்பத்தில் ஊடக சாம்ராஜ்யம் நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளதன் பின்புலம் ஜெயலலிதா அரசே.
சமீபத்தில் நடந்த மரக்காணம் கலவரம், தர்மபுரிகலவரம் அதைத்தொடர்ந்து பாமகவினர் மீது நடத்தப்படும் கடும் நடவடிக்கைகள் பாமகவினருக்கும் வன்னியர் சமுதாய மக்களிடமும் ஜெயலலிதா மீதான அதிருப்தி ஏற்பட்டாலும் பிற சமூக மக்கள் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்.
திமுக காலத்தில் மத்தியதர வர்கத்திற்கு பெரும் பிரச்சினையாக இருந்த நில அபகரிப்பு தற்போது குறைந்திருந்தாலும் தற்போதும் அது வேறு சிலரால் நடது கொண்டு தான் உள்ளது.
டாஸ்மாக் சாதனை வேதனை விற்பனையாக தொடர்கிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.