இனி ஈழ அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கும் போக முடியாதா? சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டது.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்தால் போதுமென்று கப்பலில் கூட பயணப்பட பயப்படும் கடலில் படகிலேயே பல ஆயிரம் கிமீ பயணப்பட்டு ஆஸ்திரேலியா சென்று சேர்ந்து கொண்டிருந்த ஈழ அகதிகள் உட்பட பல நாட்டு அகதிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக படகுமூலம் நுழைபவர்களுக்கு தங்க இடமளிக்காத வகையில் பிரதமர் ஜூலியா கில்லர்ட் தலைமையிலான அரசின் பாராளுமன்றத்தில் இம்மாதிரியான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு ஈழ அகதிகளுக்கு அடுத்தபடியாக ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து அதிக அகதிகள் குடியேறுகின்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.