ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக ஸ்ரீசாந்த் உட்பட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நிலையில் இன்று அணி உரிமையாளர் ஷாருக்கான்னும் போலிசால்
விசாரிக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன, ஆனால் இதை உறுதி செய்ய இயலவில்லை. ஐபிஎல் முழுக்க சூதாட்டம் நடத்தப்படுவதாக கடும் புகார்கள் ஆரம்பத்திலிருந்தே எழுந்தன, ஐபிஎல் அணிகள் அதன் உரிமையாளர்கள் மீது பணம், ஹவாலா மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள், அணிகளை வாங்க பணம் எப்படி வந்தது என்பதில் ஆரம்பித்து பல்வேறு முறைகேடுகளின் முக்கிய இடமாக ஐபிஎல் ஆட்டங்கள் உள்ளன.
சென்னையில் 8 கேலரிகள் பாதுகாப்பற்றவை என்று அறிவித்தும் கூட ரசிகர்களின் உயிரைப்பற்றிய எந்த கவலையுமின்றி உச்சநீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கி போட்டிகள் நடத்தின. சில நாட்களுக்கு முன் ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் 30 இலட்சம் ரூபாயை இழந்த எம்பிஏ பட்டதாரி சொந்தக்காரர் மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டி பின் போலிசில் சிக்கிவிடுவோம் என்று சிறுவனை கொலை செய்தார்.
காசு பணம் துட்டு மணி மணி என்று போய்க்கொண்டுள்ளது ஐபிஎல் இதில் சில லோக்கல் புக்கிகள், ஸ்ரீசாந்த் போன்ற ஆட்டக்காரர்கள் கைது செய்யப்பட உண்மையில் ஐபிஎல்லில் எல்லா சட்ட விரோத நடவடிக்கைகளையும் ஆட்டிவைக்கும் சுறாக்கள் தப்பிவிடுகின்றன.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.