BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 June 2013

லியாண்டர் பயஸ் மீதான செக் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுக்கு எதிரான, செக் மோசடி வழக்கை, மும்பை உயர் நீதிம்னறம் நேற்று தள்ளுபடி செய்தது. மும்பை டிசைனர் முஸ்தபா இஷா என்பவர் பயஸின் வீட்டிற்கு டிசைன் பணி செய்ததற்கு கொடுக்கப்பட்ட 10 இலட்சம் மற்றும் 5 இலட்சம் செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆகிவிட்டதால் பயஸிடம்
முறையிட்டும் எந்த பலனும் ஏற்படாததால் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மனு விசாரணைக்கு வந்த நாளில், முஸ்தஃபா வக்கீல் விசாரணைக்கு ஆஜராகததால், மாஜிஸ்திரேட் வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முஸ்தஃபா, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஆனால், மனுதாரரோ அவரது வக்கீலோ விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே, நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

# வழக்கு போட்டுவிட்டு ஆஜர் ஆகாமல் அப்படி என்ன வேலையாம் அவருக்கு?

Mumbai High Court dismisses cheque bounce case against Leander Paes as the  petitioner parties had not shown readiness to proceed further.

Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media