தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி மாற்றம், மதுரை கலெக்டரும் மாற்றம் சாதித்ததா கிரானைட் கிங்கர்கள்
முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிற்கு செல்லும் முன் தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மதுரை, திருவண்ணாமலை மற்றும் தர்மபுரிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
தர்மபுரியில் ஒரு சாதிக்கு பக்க சார்பாக செயல்படுகிறார் என்று பாமகவினரால் குற்றம் சாட்டப்பட்ட தர்மபுரி கலெக்டர் ஆர்.லில்லி தர்மபுரியிலிருந்து மாற்றப்பட்டது பாமகவினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆர்.லில்லி தற்போது வணிகவரிகள் துறை இணை ஆணையராக பதவியேற்க உள்ளார். தர்மபுரி கலெக்டராக கே.விவேகானந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போன்று மதுரையின் கலெக்டராக இருந்து கிரானைட் திருடர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய அன்சுல் மிஸ்ரா வணிக வரித்துறை இணை ஆணையராக பதவி ஏற்கிறார்கள், இவரை மாற்ற கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிரானைட் கிங்கரர்கள் கடும் முயற்சி எடுத்தனர்.
Dharmapuri collector R.Lilli and Madurai collector Ansul mishra transferred from their posts. PMK party cadres are happy about Lilli's transfer as PMK cadres criticise Collector lilli is supporting one caste for many occasions.
Ansul mishra had taken action against illegal Granite cutting.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.