மத்திய அரசு நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவன பங்குகள் 5% விற்பதாக அறிவித்ததை அடுத்து அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர்.
அந்த 5% பங்களை தமிழக அரசின் பொதுநிறுவனமே வாங்கி கொள்வதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். தற்பொழுது பங்குவர்த்தக விற்பனை ஒழுங்கு கட்டமைப்பு(செபி) சம்மதம் அளித்த நிலையில் மீண்டும் மத்திய அரசுடன் ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது.
ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் இருக்கும் ஊழியர்கள், பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் பட்சத்தில் மீண்டும் நிலக்கரி உற்பத்தி தொடங்கிவிடுவார்கள் என தெரிகிறது.
# தமிழகத்தை இருண்ட மாநிலம் ஆக்காம இருந்தா சரி.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.