BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 29 July 2013

தீவிரமாகும் கூர்க்காலேண்ட் போராட்டம், வாய்தா மேல் வாய்தா நீதிமன்றத்தில் கழுத்தை அறுத்துக்கொண்டவர், மேலும் செய்திகள்

தெலுங்கானாவை அடுத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க முழு அடைப்புப் போராட்டம் 

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா உருவாக்குவது போல மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை கூர்க்காலாந்து தனி மாநிலமாக அமைக்க வலியுறுத்தி 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கை சுற்றிய மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டு கால கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களில் முன்பு பலர் உயிரிழந்துள்ளனர், ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான உருவாகப்போவது உறுதியான கட்டத்தில் கூர்க்காலாந்து கோரிக்கை வலுத்துள்ளது.
-----------------
வாய்தா மேல் வாய்தா , சென்னை உயர்நீதிமன்றத்தில் தொண்டையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற இளைஞர்

எம்.பாலசுப்ரணமியம் என்ற 30 வயது இளைஞர் 4 ஆண்டுகளுக்கு முன் மோட்டார் சைக்கிளில் ஒருவரை மோதி விபத்துக்குள்ளான வழக்கு இழுத்துக்கொண்டே சென்றதால் சம்பவ தினத்தன்றும் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதால் தன் தொண்டையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் மேற்கொண்டுள்ளார், மயங்கி விழுந்தவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இவர் தாம்பரம் அருகில் உள்ள முடிச்சூரில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் மனநல பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துவருவதாகவும் மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

# இவரென்ன அரசியல்வாதியா? வாய்தா மேல் வாய்தா வாங்க?



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media