BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 29 July 2013

மணல் மாஃபியாவை எதிர்த்த ஐஏஎஸ் அதிகாரி பொய்குற்றச்சாட்டில் சஸ்பெண்ட்

மணல் மாஃபியாவை எதிர்த்த ஐஏஎஸ் அதிகாரி பொய்குற்றச்சாட்டில் சஸ்பெண்ட்

துர்கா சக்தி நாக்பல் என்ற சப்-டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட்டை சஸ்பெண்ட் செய்துள்ளது அகிலேஷ் யாதவின் உத்திர பிரதேச அரசு. சட்டத்துக்கு புறம்பாக அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதியின் கட்டடப்பணியை நிறுத்த சொன்னதும் அதை இடிக்க சொன்னதும் ரம்ஜான் மாதத்தில் சமூக அமைதியை குலைக்கும் செயல் என்று கூறி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஆனால் துர்கா சக்தி நாக்பல் என்ற இந்த ஐஏஎஸ் பெண் அதிகாரி கிரேட்டர் நொய்டா பகுதியில் இயங்கி வந்த சட்டத்துக்கு புறம்பான மணல் கொள்ளைகளை தடுத்து வந்துள்ளார், 300க்கும் மேற்பட்ட மணல் லாரிகளை மடக்கி பிடித்துள்ளார். இதனால் கோபமடைந்த மணல் மாஃபியா தான் இதை செய்துள்ளது என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

எதிர்கட்சி பாஜகவினர் மற்றும் மேலும் பலர் நல்ல அதிகாரிகளை அவமானப்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

# இருக்கிற ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளையும் இம்மாதிரி தண்டிக்கிறார்கள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media