உத்திரபிரதேசம் புலந்த்ஷஹர் மாவட்டர் குஜ்ரா நகர சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜகவுல்லா கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனார்,
அது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரித்து வந்தது, காணமல் போன பத்திரிக்கையாளர் நேற்று கோத்வாலி தெஹத் பகுதியில் உள்ள சோளா என்ற இடத்தில் பிணமாக கண்டுபிடிக்கபட்டார்.
அவரது உடல் சாக்கு மூட்டைக்குள் கட்டி தூக்கி எறிய பட்டிருந்தது, மேலும் அவரது உடலில் பல வெட்டுகாயங்கள் இருந்தது, இவர் சித்திரவதை செய்யபட்டு கொலைசெய்யபட்டிருக்கலாம் என காவல்துறை கருதிகிறது, கடந்த 45 நாட்களில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவது உத்திரபிரதேசத்தில் அதிகரித்துள்ளது. இறந்த பத்திரிக்கையாளர் ஜகவுத்துல்லா நான்காவது நபர் ஆவார், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென பத்திரிக்கையாளர்கள் சங்கம் அரசுக்கு வலியுறித்து வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.