தற்போதைய தமிழக முதல்வர் 1991-1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்வராக இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமான 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கில் ஜெயலலிதா மட்டுமின்றி சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு ஆரம்பம் முதலே பல பிரச்சனைகளை தாண்டி வந்துள்ளது, தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் இவ்வழக்கிற்கு உதவியாக இருப்பதாக திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டது, அதை ஏற்றுகொண்ட கர்நாடகா நீதிமன்றம் திமுக சார்பு வழக்கரைஞர் அரசு தரப்பு வக்கிலுக்கு உதவ அனுமதியளித்தது.
தற்பொழுது மீண்டும் தி.மு.க சார்ப்பில் ஒரு மனு கொடுக்கபட்டது, இந்த சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடப்பதே உள்ளூர் ஆதிக்க சக்திகள் எதுவும் தலையிடக்கூடாது என்பதற்காக தான், ஆனா அவை நிறைவேறவில்லை. ஆகையால் தற்பொழுது அரசு தரப்பு வக்கீலாக இருக்கும் பவானிசிங் மாற்றப்பட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட பட்டிருந்தது.
இம்மனுவிற்கு பதிலளிக்க கார்நாடக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, இன்நிலையில் இன்று அரசு தரப்பு வக்கில் பவானிசிங்கை கர்நாடக அரசு அதிரடியாக திரும்ப பெற்றது. இச்சம்பவம் மேலும் இவ்வழக்கிற்கு பரபரப்பை கூட்டியுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.