ஷிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது, கடந்த வாரம் ஷிரிய ராணுவம் ராசாயனகுண்டு வீசி விஷவாயு தாக்குதல் நடத்தியதாக உலகெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது, இதுகுறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன.
தற்போது வந்த தகவல் படி, அமெரிக்க ராணுவம் தமது கப்பற்படையை ஷிரியா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தெரிகிறது, அதனை தொடர்ந்து இன்று தங்கம், வெள்ளி விலை கடும் உச்சத்தை கண்டது.
இந்திய எம்.சி.எக்ஸ் சந்தையில் தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் உயர்ந்து 24 காரட் 3350 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது
வெள்ளி கிலோ ஒன்றுக்கு 3500 உயர்ந்து தற்பொழுது 56500 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது.
இவற்றையெல்லாம் விட இந்திய பொருளாதாரத்திற்கு அதிகம் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கச்சா எண்ணைய் பீப்பாய் ஒன்றிற்கு ரூ 500 உயர்ந்து தற்பொழுது ரூ .7300 க்கு பிப்பாய் ஒன்று என்று வர்த்தக் ஆகிகொண்டிருக்கிறது.
ஒருவேளை அமெரிக்க ராணுவம் ஷிரியா மீது தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அண்டை இஸ்லாமிய நாடுகள் ஷிரியாவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம், இதனால் கச்சா எண்ணைய் உற்பத்தி குறைந்து மேலும் விலை உயரலாம். அவ்வாறு நடந்தால் மிக விரைவிலேயே பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 100 ரூபாய் என்று இந்தியாவில் சில்லறை வர்த்தகம் ஆகும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.