புதுடில்லி பேருந்து பாலியல் வன்புணர்வு கொலைவழக்கில் மைனர் குற்றவாளிக்கு வெறும் 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்க வேண்டும் என தண்டனை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் ஏமாற்றப்பட்டதாக கதறல்
கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லியில் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார், இதில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவன் 17 வயது கொண்ட மைனர், இவன் மீதான வழக்கு மட்டும் சிறுவர் கோர்ட்டில் மைனர் சட்டங்களுக்குட்பட்டு நடத்தப்பட்டது, இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவனுக்கு 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்க வேண்டிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது, இவன் ஏற்கனவே 8 மாதங்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருப்பதால் மேலும் 2 ஆண்டுகள் 4 மாதங்கள் மட்டுமே இவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் வருவான்.
கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கூறிய பெற்றோர்கள், இந்த நாட்டில் பெண்ணாக பிறப்பதே பெரும் பிழை என்று வருந்தினர், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளார்கள்
இந்த 17 வயது மைனர் தான் அன்று அந்த பெண்ணிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டவன், அந்த பெண் நினைவோடு இருக்கும் போது ஒரு முறை கற்பழித்தவன் அந்தப்பெண் நினைவிழந்த நிலையிலும் ஒரு முறை கற்பழித்தான், ஆனால் இவன் 18 வயதுக்கு குறைந்த மைனர் குற்றவாளி என்பதால் மூன்றாண்டுகள் வரை மட்டுமே தண்டனை கிடைக்கும் நிலை உள்ளது.
பிரிட்டனில் 10வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பல நாடுகளில் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் செய்யும் கொலை, கற்பழிப்பு குற்றங்கள் பிற மேஜர் குற்றவாளிகளை போலவே சட்டம் தண்டனை வழங்கும், ஆனால் இந்தியாவில் சட்டம் 18 வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் கொடூர குற்றங்களை கூட மைனர் என்று கூறி குறைந்த அளவே தண்டனை வழங்கும்.
# மைனர் என்று சொல்லி இம்மாதிரியான கொடூர குற்றவாளிகளை மிகக்குறைந்த தண்டனை வழங்குவது சரியா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.