வேலூர் அருகே சித்தூர், காட்பாடி சாலையில் கிங்ஸ்டன் என்ற பொறியியல் கல்லூரி தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களது மகன் கதிர்ஆனந்த் துரௌமுருகனால் நடத்தபட்டு வருகிறது, இக்கல்லூரியில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் அதிகம் படிக்கிறார்கள்.
தெலுங்கானா பிரிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்ததை தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் தமிழ்நாடு, ஆந்திராவுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபட்டு இருக்கிறது, கல்லூரி நிர்வாகமும் தமது பேருந்து சேவையை நிறுத்தி வைத்தது. ஆதலால் மாணவர்கள் தங்களது மோட்டார்சைக்கிள் அல்லது ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.
கடந்த செவ்வாய் அன்று இந்த கல்லூரியில் படித்து வரும் ஷர்வான்குமார் மற்றும் சாய் சந்துரு கல்லூரி முடித்து வீரு திரும்பும் நேரத்தில் சித்தூர் சாலையில் விபத்து நடந்தது, இதுல் மாணவர் ஷ்ர்வான்குமார் படுகாயமைந்தார். உடனடியாக கல்லூரிக்கு அழைத்த சாய் சந்துரு கல்லூரியில் இருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்திருக்கிறது.
தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்ட மாணவர் ஷர்வான் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார், இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வேலூர்-திருப்பதி சாலையில் மறியல் செய்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
விரைந்த வந்த காவல்துறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது, பேருந்து சேவை மீண்டும் தொடங்கும் வரை ஆந்திரா மாணவர்கள் தங்க கலூரி நிர்வாகம் விடுதி சேவை தர வேண்டும், விபத்தில் உயிரிழந்த மாணவன் ஷிர்வான் குமார் குடும்பத்தார்க்கு உதவி தொகையாக 25 லட்சம் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கல்லூரி நிர்வாகத்திடம் பேசி ஆவண செய்வதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததின் பெயரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
தெலுங்கானா பிரிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்ததை தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவி வருவதால் தமிழ்நாடு, ஆந்திராவுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தபட்டு இருக்கிறது, கல்லூரி நிர்வாகமும் தமது பேருந்து சேவையை நிறுத்தி வைத்தது. ஆதலால் மாணவர்கள் தங்களது மோட்டார்சைக்கிள் அல்லது ஆட்டோ மூலம் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.
கடந்த செவ்வாய் அன்று இந்த கல்லூரியில் படித்து வரும் ஷர்வான்குமார் மற்றும் சாய் சந்துரு கல்லூரி முடித்து வீரு திரும்பும் நேரத்தில் சித்தூர் சாலையில் விபத்து நடந்தது, இதுல் மாணவர் ஷ்ர்வான்குமார் படுகாயமைந்தார். உடனடியாக கல்லூரிக்கு அழைத்த சாய் சந்துரு கல்லூரியில் இருக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்திருக்கிறது.
தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்லபட்ட மாணவர் ஷர்வான் குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார், இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வேலூர்-திருப்பதி சாலையில் மறியல் செய்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
விரைந்த வந்த காவல்துறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது, பேருந்து சேவை மீண்டும் தொடங்கும் வரை ஆந்திரா மாணவர்கள் தங்க கலூரி நிர்வாகம் விடுதி சேவை தர வேண்டும், விபத்தில் உயிரிழந்த மாணவன் ஷிர்வான் குமார் குடும்பத்தார்க்கு உதவி தொகையாக 25 லட்சம் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
கல்லூரி நிர்வாகத்திடம் பேசி ஆவண செய்வதாக காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததின் பெயரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.