BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 17 August 2013

எலிக்கு வலை வச்சா ஏரோபிளேனா மாட்டும்.

கீரமங்கலம் பகுதி மக்கள் தான் உண்டு, தன் வேலை உண்டு என வாழ்பவர்கள், அந்த கிராமத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளியே வராது. அப்படி அமைதியே உருவான கீரமங்கலம் கிராமத்தில் சில நாட்களாக புது சிக்கல் உருவாகியது, அவ்வபோது ஆடு, சைக்கிள் என வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டவை காணமல் போயின.

வேறு வழியின்று பொதுமக்கள் காவல்துறையில் புகார் அழித்தனர், காவல்துறை செல்வநாயகம் என்பவரை அங்கே இரவு ரோந்து பணிக்கு அனுப்பியது, ஆகினும் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை, எப்படியும் திருடனை பிடிக்க வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்ட காவலர் செல்வநாயகம் திருடனை பிடிக்க பொறி வைக்க நினைத்தார்.

கடைவீதியில் உள்ள ஒரு நகைக்கடை வாசலில் தனது சைக்கிளை நிறுத்தினார், அந்த கடை வாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அவரது சைக்கிள் முழுவதுமாக வருமாறு பார்த்துக்கொண்டார், பின் எதிரில் இருக்கும் கடை மறைவில் அமர்ந்து திருடனுக்காக காத்திருந்தார்.

வெகுநேரம் ஆகியும் திருடன் வரவில்லை, ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததால் லேசாக கண்ணசந்தார் செல்வநாயகம், சட்டென்று முழித்த அவருக்கு அதிர்ச்சி, எதிரியில் சைக்கிளை காணோம், சுற்றியிருந்த தெருக்களிலும் காணோம். கண்காணிப்பு கேமராவில் சோதித்த பொழுது அதிகாலை 4.30 மணியளவில் தலையில் முண்டாசு அணிந்த ஒருவர் சைக்கிளை எடுத்து சென்றது தெரிகிறது. தற்பொழுது பல திருட்டு புகார்களுக்கு மத்தியில் செல்வநாயகம் சைக்கிளை காணோம் புகாரும் இருக்கிறது.

# காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா............. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media