நடிகர் விஜய், அமலாபால் நடித்து இயக்குனர் விஜய் இயக்கி மிஸ்ரி ப்ளீம்ஸ் சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரித்த தலைவா படம் தமிழகத்தை தவிர உலகமெங்கும் கடந்த ஒன்பதாம் தேதி வெளியானது.
தமிழகத்தில் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்ததால் திரையரங்க உரிமையாளர்கள் தலைவா படத்தை திரையிட மறுத்தனர், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியது, ஆனால் காவல்துறை இது உங்களுக்கும் திரையரங்குக்கும் உள்ள பிரச்சனை அதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் நடக்கும் உங்கள் உண்ணாவிரததிற்கு அனுமது தரமாட்டோம் என மறுத்தது.
விஜய் தரப்பில் சட்ட ரீதியாக இப்பிரச்சனையை சந்திக்க தமிழக அரசு மீது வழக்கு தொடர ஆலோசனைகள் நடந்து வரும் வேளையில் தீடிரென தலைவா பட தயாரிப்பாளர் நெஞ்சுவலியால் அவதிபட்டு வடபழனி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைவா படம் வெளியாகவில்லை என்றால் கோடிக்கணக்கில் கடனாளி ஆகிவிடுவேன் என சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார், அதை தொடர்ந்து அவருக்கு இருந்த மன உளைச்சலே நெஞ்சுவலிக்கு காரணம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்ததால் திரையரங்க உரிமையாளர்கள் தலைவா படத்தை திரையிட மறுத்தனர், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியது, ஆனால் காவல்துறை இது உங்களுக்கும் திரையரங்குக்கும் உள்ள பிரச்சனை அதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் நடக்கும் உங்கள் உண்ணாவிரததிற்கு அனுமது தரமாட்டோம் என மறுத்தது.
விஜய் தரப்பில் சட்ட ரீதியாக இப்பிரச்சனையை சந்திக்க தமிழக அரசு மீது வழக்கு தொடர ஆலோசனைகள் நடந்து வரும் வேளையில் தீடிரென தலைவா பட தயாரிப்பாளர் நெஞ்சுவலியால் அவதிபட்டு வடபழனி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தலைவா படம் வெளியாகவில்லை என்றால் கோடிக்கணக்கில் கடனாளி ஆகிவிடுவேன் என சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார், அதை தொடர்ந்து அவருக்கு இருந்த மன உளைச்சலே நெஞ்சுவலிக்கு காரணம் என கூறப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.