BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 18 August 2013

விவசாயிகள் நலனே முக்கியம் - முதல்வர் ஜெயலலிதா

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் காவிரி படுகையில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மீதேன் வாயு எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு உற்பத்தி பகிர்வு அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்ப்படுத்தி கொண்டது.

இதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அப்பொழுது தமிழிகத்தை ஆண்டு கொண்டிருந்த திமுக அரசு அதே பகுதியில் பெட்ரோலியம் குறித்து ஆய்வு செய்ய அனுமதி வழங்கியது.

பொதுநல அமைப்புகள் எடுத்த கருத்து கணிப்பின் படி இத்திட்டம் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்றும் சூற்றுசூழல் பாதிப்புகளால் விவசாயம் பெருமளவு நசியும் எனவும் தெரிவிக்கபட்டது. இது குறித்து மத்திய அரசு எந்த வித வெள்ளை அறிக்கையும் வெளியிட்டதாக தெரியவில்லை.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நிச்சயம் மாநில அரசியின் ஒப்புதல் வேண்டும், விவசாயிகளின் நலனுக்கு கேடு விளைவிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ஜெயலலிதா தலைமையிலான தமிழஅரசு தெரிவித்துள்ளது

# கூடங்குளத்துக்கும் தான் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொடுக்கல.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media