BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 18 August 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்ரயில் மறியல் - கருணாநிதி

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி கடும் கண்டனம்

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வு களை மத்திய அரசு மதித்திட வேண்டும் அதை அலட்சியப்படுத்தக்கூடாது எனவும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தமிழர்கள் இல்லங்கள்தோறும், வணிக நிலையங்கள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், ரயில் மறியல் நடை பெறும் என்றும் மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும்; பண்டித நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர் களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தை யும் நிறைவேற்றாமல் அவற்றை மீறி, சர்வ தேசக் கண்ணோட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவது மாய் இழந்து நிற்கிறது இலங்கை. இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக் கையை மேற்கொண்டு வருகிறது.
ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி உருவான இலங்கை அரசமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய் வதற் கான அனைத்து வகை முயற்சிகளையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 41 பேருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதி மன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பல முறை கடிதங்களை எழுதியும், தூதுவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப் பற்றி இலங்கை அரசு இம்மியளவுகூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரிய வில்லை.

இந்தச் சூழ்நிலையிலேதான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ்மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் காமன்வெல்த் நாடுகளின் தலைவர் கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக 18-8-2013 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் டெல்லிக்கு வருவதாக செய்திவந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக் கையை அலட்சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரி விக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக் கணிக்குமானால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ்மக்களின் உணர்வையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த; அந்நாளில் தமிழர் இல்லங்கள்தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரெயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

# கலைஞர் ஜி என்ன அங்க சத்தம்? சும்மா பேசிக்கிட்டிருந்தோம் மேடம்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media